அண்மைய செய்திகள்

recent
-

முத்தரிப்பு துறையில் கடற்படையினரின் கெடுபிடி அதிகரிப்பு-அங்குள்ள கடற்படை அரனை பாரிய முகாமாக்கும் நடவடிக்கை ஆரம்பம்-மக்கள் அச்சத்தில்.


முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தில் உள்ள கடற்படை முகாம் நேற்று (20) வியாழக்கிழமை முதல் பாரிய அளவில் விஸ்தரிக்கப்பட்டு வருவதாக அக்கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடற்படையினருக்கும் முத்தரிப்புத்துறை கிராம மக்களுக்கும் இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட முறுகல் நிலையை தொடர்ந்து தற்போது வரை அப்பிரதேசத்து மீனவர்கள் அச்சத்தின் காரணமாக கடற்தொழிலுக்கு செல்லாத நிலை காண்படுவதாக பாதீக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் காணப்பட்ட சிறிய அளவினான கடற்படை அரன் தற்போது நிறந்தரமான பாரிய அளவிலான கடற்படை முகாமாக விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் குறித்த கடற்படை அரனில் இருந்த கடற்படை வீரர்கள் மாற்றப்பட்டு புதிய கடற்படை வீரர்கள் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிலாபத்துறை பிரதான வீதி மற்றும் நானாட்டான் அருவியாற்று வீதி ஆகிய வீதிகளில் கடற்படையினர் வீதித்தடைகளை போட்டு சோதனைகளை மேற்கொள்ளுவதோடு,அடையாள அட்டைகளையும் பரிசோதிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு கடற்படையினர் தொடர்ச்சியாக பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதினால் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்ல அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

-கடற்படையினரின் அதிவேக படகுகள் முத்தரிப்புத்துறை கடலில் உலாவுவதாகவும்,முத்தரிப்புத்துறை மீனவர்கள் என்றால் பல்வேறு கெடுபிடிகளை மேற்கொள்ளுவதாக பாதீக்கப்பட்ட மீனவர்கள் வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வாவிடம் முறையிட்டுள்ளனர்.

இதே வேளை கடற்படையினரின் குறித்த நடவடிக்கைகளினால் முத்தரிப்புத்துறை கிராமம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை எனவும்,அங்குள்ள மக்கள் மத்தியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,அங்கு அதிகலவான கடற்படை, புலனாய்வுத்துறையினர், மற்றும் காவல் துறையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளமையினால் மக்களின் இயல்பு நிலை பாதீக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா மேலும் தெரிவித்தார்.



முத்தரிப்பு துறையில் கடற்படையினரின் கெடுபிடி அதிகரிப்பு-அங்குள்ள கடற்படை அரனை பாரிய முகாமாக்கும் நடவடிக்கை ஆரம்பம்-மக்கள் அச்சத்தில். Reviewed by NEWMANNAR on October 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.