உலகையே மாற்றும் சக்தி ஊடகங்களுக்கு மட்டுமே உண்டு...
இலங்கையில் ஊடகங்கள் சிறப்புத் தன்மையில் இயங்குமானால் எதிர் காலத்தில் பாரிய இலக்கு ஒன்றை எட்ட முடியும் என பத்திரிகை வெளியீட்டு பணிப்பாளர் நாயகம் ரங்கா கலன் சூரிய தெரிவித்துள்ளார்.
செய்திதாள்களின் 20ஆம் வருட வெற்றிக் கொண்டாடத்தில் கலந்துக் கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்
இலங்கையின் ஊடகங்கள் வலிமையான நோக்குடனும், நாட்டினை ஈடேற்றும் வகையிலும் பயணித்து கொண்டிருப்பதானது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.
இன்று, சமூக ஊடகங்களே வலிமையான பொதுக் கருத்துக்களை ஊக்குவிக்கும் ஒரு வழிமுறையாக மக்களால் பார்க்கப்படுகிறது. மற்றும் தேசிய ஒற்றுமை என்பது ஊடகத்திலேயே தங்கியுள்ளது.
எதிர் காலத்தில் பத்திரிகைகள் வெளியாகும் தினம் மற்றும் நேரத்தை மாற்றுவதற்காகான எற்பாடுகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
இவ்வாறு செயற்படுத்தும் பட்சத்தில் இலாப நோக்கம் அல்லாத முன் மாதிரியான ஊடக வலையமைப்பை உருவாக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலகையே மாற்றும் சக்தி ஊடகங்களுக்கு மட்டுமே உண்டு...
Reviewed by Author
on
November 18, 2016
Rating:

No comments:
Post a Comment