அண்மைய செய்திகள்

recent
-

யாழ். பல்கலைக்கழக, கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தின்....


யாழ். பல்கலைக்கழக, கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் கற்கை நெறிகள் இன்று (20) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஏற்கனவே விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் என்பன இயங்கி வருகின்ற நிலையில் தற்போது தொழில்நுட்ப பீடமும் இயங்க ஆரம்பித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 23 மாவட்டங்களில் இருந்து 211 மாணவர்கள் இங்கு அனுமதி பெற்றுள்ளதாகவும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

Studies at the Faculty of Technology Beginning at University of Jaffna
அவர் இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

யாழ். பல்கலைக்கழகத்தின் பத்தாவது பீடமாக தொழில்நுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் எமது பல்கலைக்கழகம் மூன்றாவது நிலையில் தொழில்நுட்ப பீடத்தையும் ஆரம்பித்துள்ளது.


இங்கு அனுமதி பெற்றுள்ள மாணவர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் வருட மாணவர்களுக்கான தங்குமிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் 525 மில்லியன் ரூபா செலவில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டடம் அமைக்கும் பணிகள் அரம்பிக்கப்படவுள்ளன.


அதன் பணிகள் நிறைவுற்றதும் பெரும்பாலும் இரண்டாம் வருட கற்கைகளை மாணவர்கள் அங்கு தொடரக் கூடியதாக இருக்கும்.

மேலும், இங்கு ஆண், பெண்களுக்குரிய இரண்டு விடுதிகள் காணப்படுகின்றன. மேலும் இரண்டு விடுதிகள் அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

தொழில்நுட்ப பீடத்திற்குரிய வசதி வாய்ப்புக்களை பொறுத்தவரை கடந்த வருடம் 13 மில்லியனுக்குரிய உபகரணங்களை வாங்கியிருக்கின்றோம்.


இந்த வருடம் சுமார் 120 மில்லியனுக்குரிய உபகரணங்களை கொள்வனவு செய்ய இருக்கின்றோம். எங்களுக்கு பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவும், உயர் கல்வி அமைச்சும் மிகவும் உறுதுணையாக இருந்து நிதி வசதிகளை ஏற்படுத்தி தருகின்றார்கள்.

மேலும் முக்கியமாக கிளிநொச்சி வளாகத்தில் பதினொறாவது பீடமாக விவசாய பீடத்துடன் இணைந்து விளையாட்டு விஞ்ஞான பீடத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி எஸ். சற்குனராஜா, தொழில்நுட்ப பீடங்களுக்கான தேசிய இணைப்பாளர் கலாநிதி ரிஏ. பியசிறி.பேராசிரியர் கே. கந்தசாமி, பொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜா, விவசாய பீட பீடாதிபதி ரி.மிகுந்தன் பதில் பதிவாளர் இராஜவிசாகன் மற்றும் விரிவுரையாளர் மாணவார்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலைக்கழக, கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தின்.... Reviewed by Author on December 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.