பள்ளிமுனை கடற்கரையில் கடற்படையினரின் கெடுபிடியால் மீனவர்கள் பாதிப்பு - Photos
மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை கடற்தொழிலுக்குச் சென்று மீண்டும் கரை திரும்பிய படகு ஒன்றை கடற்கரையில் இடை மறித்த கடற்படையினர் தேவையற்ற காரணங்களை கூறி தாமதிக்க வைத்தமையினால் தாம் பிடித்த பெறுமதியான மீன்களை சந்தைப்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக பாதீக்கப்பட்ட பள்ளிமுனை கிராம மீனவர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக குறித்த மீனவர் தெரிவிக்கையில்,,,,
மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை(20) காலை 5 மணியளவில் நாங்கள் படகு ஒன்றில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றோம்.
இதன் போது வேறு படகுகளிலும் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர்.
இந்த நிலையில் எமது வலைகளில் பிடிபட்ட மீன்களை துடிக்க துடிக்க உயிருடன் படகில் ஏற்றி சந்தைப்படுத்துவதற்காக பள்ளிமுனை கடற்கரையினை நோக்கி வந்தோம். இதன் போது பள்ளிமுனை கடற்கரையில் அமைந்துள்ள கடற்படை சோதiனைச்சாவடிக்கு முன் காலை 9.30 மணியளவில் வந்தோம்.
இதன் போது எமது படகை தடுத்து வைத்த கடற்படையினர் எமது படகில் உள்ள மீன்கள் 'டைனமெற் வெடி பொருள்' மூலம் பிடிக்கப்பட்ட மீன்கள் எனவும்,அவற்றை சோதனை செய்ய வேண்டும் என கடற்படையினர் தெரிவித்தனர்.
எனினும் குறித்த மீன்கள் உயிருடன் காணப்படுவதாகவும் அவை வலையின் மூலம் பிடிக்கப்பட்ட மீன்கள் என தெரிவித்ததோடு குறித்த மீன்களை உரிய நேரத்திற்கு சந்தைப்படுத்தாது விட்டால் அவற்றை விற்பனை செய்ய முடியாது என கடற்படையினரிடம் தெரிவித்த போதும் கடற்படையினர் எமது படங்கில் பிடிபட்ட மீன்களை விடுவிக்கவில்லை.
இந்த நிலையில் கடற்படை அதிகாரி ஒருவர் கடற்கரைக்கு வருகை தந்தனர்.பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.
கடற்படையினரினால் தடுத்து வைக்கப்படட படகில் காணப்பட்ட சில மீன்களை எடுத்து கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் பரிசோதித்து பார்த்த பின் குறித்த மீன்கள் 'டைனமெற் வெடி பொருள்' மூலம் பிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குறித்த மீன்களை கொண்டு செல்லுமாறு கடற்படையினர் தெரிவித்தனர்.
எனினும் குறித்த மீன்களை சந்தைப்படுத்த முடியாத நிலையில் அவற்றை அரை விலைக்கே விற்பனை செய்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த படகில் தொழிலுக்குச்சென்ற 5 மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதீக்கப்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களாக பள்ளிமுனை மீனவர்கள் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
டைனமெற் வெடிபொருள் மூலம் மீன் பிடிக்கின்றார்கள் என கூறி சாதாரணமாக வலை மூலம் மீன் பிடிக்கின்ற மீனவர்களின் மீன்களையும் தடுத்து வைத்து மீனவர்களுக்கு பல்வேறு அசௌகரியங்களை கடற்படையினர் தொடர்ந்தும் வழங்கி வருவதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
பள்ளிமுனை கடற்கரையில் கடற்படையினரின் கெடுபிடியால் மீனவர்கள் பாதிப்பு - Photos
Reviewed by NEWMANNAR
on
December 20, 2016
Rating:
No comments:
Post a Comment