அண்மைய செய்திகள்

recent
-

கூட்டமைப்பு பிச்சை எடுக்கவில்லை....! டக்ளஸ்க்கு பதிலடி கொடுத்த கூட்டமைப்பு...


பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தவுக்கு, இணக்க அரசியல் குறித்த எதுவும் தெரியவில்லை எனவும், நாங்கள், இணக்க அரசியல் செய்யவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பாராளுமன்றில் இன்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

சரியாகக் கூறுவதாயின் நாங்கள் பிச்சை எடுக்கவில்லை. அத்துடன், அரசாங்கத்திடம் சலுகைகளை பெற்றுக்கொள்ளவும் இல்லை அதனை எதிர்பார்க்கவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த அரசாங்கத்தின் போது, இணக்க அரசியல் செய்வதாகக் கூறிக்கொண்டு டக்ளஸ் தேவானந்த, சிறிய மன்னர் போல செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காலப்பகுதியிலேயே யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதியில் பலர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள அவர், அது குறித்த விரைவில் வெளிவரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினை சேர்ந்த இருவருக்கு அண்மையில் மரண தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர், மக்களுக்கு தேவையானவற்றுக்கு, சரியானவற்றுக்கு நாம் ஆதரவளிப்போம் எனவும் கூறியுள்ளார்.

கூட்டமைப்பு பிச்சை எடுக்கவில்லை....! டக்ளஸ்க்கு பதிலடி கொடுத்த கூட்டமைப்பு... Reviewed by Author on December 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.