அண்மைய செய்திகள்

recent
-

ஜேர்மன் நகரில் கிறிஸ்மஸ் சந்தைத் தொகுதியில் பாரிய விபத்து -இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை


பெர்லின் நகரில் இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் அந்த நாட்டிலுள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரகாஷிகா மகேஷினி கொலன்னாவ வெளியிட்டுள்ளார்.

நேற்று இரவு ஜேர்மன் நகரில் கிருஸ்மஸ் சந்தைத் தொகுதியில் கனரக வாகனம் ஒன்று புகுந்து விபத்துக்குள்ளானது.

இதில் பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதுடன், 50 பேர் வரை காயமடைந்திருந்தனர்.

வரலாற்று சிறப்புமிக்க கைசர் வில்கெட் நினைவு தேவாலயம் அருகே நேற்று இரவு 08.00 மணி அளவில் அதிவேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று வர்த்தக தொகுதிக்குள் புகுந்து சுமார் 50 முதல் 80 அடி தூரத்துக்கு சரமாரியாக மோதியுள்ளது. உலகம் முழுதும் இந்த விடயம் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையிலேயே இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜேர்மன் நகரில் கிறிஸ்மஸ் சந்தைத் தொகுதியில் பாரிய விபத்து -இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை Reviewed by NEWMANNAR on December 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.