அண்மைய செய்திகள்

recent
-

தபாலக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் அவதியுறும் பொதுமக்கள்


பதவி உயர்வு மற்றும் நியமனம் வழங்கலின் போது இடம்பெறுகின்ற முறைக்கேடுகளை தடுத்தல் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து தபாலக ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

தபால் சேவை ஊழியர்களின் நாடு தழுவிய ரீதியிலான பணிப்பகிஷ்கரிப்பு மட்டக்களப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது.

இன்றைய பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கை தொடர்பாக தகவல் அறியாத மட்டக்களப்பு வாழைச்சேனை முதியவர்கள் சமூகசேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் பணத்தினை பெற தபால் நிலயம் வந்து பெரும் ஏமாற்றத்தினை அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பான தகவல் சிங்கள மொழியில் எழுதப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால்

இதனை தம்மால் வாசிக்க முடியாமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


தபால் சேவை ஊழியர்கள் 7 கோரிக்கைகளை முன்வைத்து இன்றும் நாளையும் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற் சங்கத்தின் முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளனர்.
தபாலக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் அவதியுறும் பொதுமக்கள் Reviewed by NEWMANNAR on December 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.