அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த 'ச. ஜேசுராஜன் லோகு' தெரிவு

மன்னார் மாவட்டத்தின் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக முசலி பிரதேச்ச செயலாளர் பிரிவில் போட்டியிட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த சவேரியான் ஜேசுராஜன் லோகு மாவட்ட மட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தெரிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 4 ஆவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று 18 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) இடம் பெற்றது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்காக 17 வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்கினர்.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 04 வேட்பாளர்களும்,நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 4 வேட்பாளர்களும், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 4 வேட்பாளர்களும்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 2 வேட்பாளர்களும்,மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 3 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட 17 வேட்பாளர்களில் இருவர் பெண்களாவர்.

மன்னார் மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கு 7 ஆயிரத்து 87 இளைஞர் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

வாக்களிப்பதற்காக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 3 வாக்களிப்பு நிலையங்களும், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 2 வாக்களிப்பு நிலையங்களும்,முசலி பிரதேச்ச செயலாளர் பிரிவில் 2 வாக்களிப்பு நிலையங்களும்,மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 2 வாக்களிப்பு நிலையங்களும்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 2 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்களிப்புக்கள் இடம் பெற்றது.

இந்த நிலையில் வாக்களிப்புக்கள் நிறைவடைந்த நிலையில் பிரதேசச் செயலகங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதற்கமைவாக அதி கூடிய வாக்குகளாக 582 வாக்குகளைப் பெற்ற முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் போட்டியிட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த 'சவேரியான் ஜேசுராஜன் லோகு' மன்னார் மாவட்டத்தின் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் மேலும் தெரிவித்தார்.


-மன்னார் நிருபர்-

(18-12-2016)

மன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த 'ச. ஜேசுராஜன் லோகு' தெரிவு Reviewed by NEWMANNAR on December 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.