1,30,000 மக்கள் வெளியேற்றம்..அமெரிக்காவில் பேரழிவு அபாயம்.....
அமெரிக்காவில் பேரழிவு ஏற்படும் அபாயம் காரணமாக எச்சரிக்கை நடவடிக்கையாக 1,30,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வடக்கு கலிபோர்னியா பகுதியிலிருந்தே மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்காவின் உயரமான Oroville அணை கனமழை காரணமாக முழுவதும் நிரம்பி தண்ணீர் வழிந்து வருகிறது.
பலவீனமான அணை எந்த நேரத்தில் சரியக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் அப்பகுதியல் உள்ள 1,30,000 மக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
மேலும் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக அணை நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
50 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக Oroville அணையில் இத்தகைய அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
1,30,000 மக்கள் வெளியேற்றம்..அமெரிக்காவில் பேரழிவு அபாயம்.....
Reviewed by Author
on
February 13, 2017
Rating:
Reviewed by Author
on
February 13, 2017
Rating:


No comments:
Post a Comment