மன்னார் துரையம்மா அன்பகத்தின் அலுவலகமும் தையல் தொழிலகமும் திறப்பு விழா.....19-02-2017
மன்னார் மாவட்டத்தில் கல்விச்சேவையினை ஆற்றிவரும் துரையம்மா அன்பகமானது அன்பகத்தின் பத்தாவது ஆண்டு ஆரம்பத்தை முன்னிட்டு இவ்வருடமும் தனது சேவையின் விரிவாக்கமாக தேவன்பிட்டிக்கிராமத்தில் இருந்தும் 23 மாணவர்களை கல்விச்சேவைக்காக உள்வாங்குகின்றது.
அத்தோடு பெண்களின் சுயதொழில் மேம்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் தையல் தொழில் மூலம் பொருளாதாரத்தினை பெற்றுக்கொள்வதற்காக மாந்தை பிரதேசத்தில் பாப்பாமோட்டையில் அமைந்திருக்கும் தனது அன்பக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அலுவலக கட்டடத் திறப்பு விழாவும் அலுவலகத்தில் சிறிய தையல் தொழிலகம் ஒன்றையும் அமைத்து அதன் திறப்பு விழாவினையும் 19-02-2017 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை மாலை நிகழ்வாக ஏற்பாடு செய்துள்ளது.
நல்லுள்ளங்கள் அனைவரையும் அன்பாேடு அழைக்கின்றார்கள் துரையம்மா அன்பகத்தினர்......
மன்னார் துரையம்மா அன்பகத்தின் அலுவலகமும் தையல் தொழிலகமும் திறப்பு விழா.....19-02-2017
Reviewed by Author
on
February 17, 2017
Rating:

No comments:
Post a Comment