சொந்த நிலத்தில் கால்பதிக்கும் வரை போராட்டம் தொடரும்! கேப்பாப்புலவு மக்கள் திட்டவட்டம்....
எமது சொந்த நிலத்தில் கால்பதிக்கும் வரையும் இந்தப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என கேப்பாப்புலவில் காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த முதலாம் திகதி முதல் கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 17வது நாளாகவும் தொடர்கிறது.
இலங்கையின் வடபகுதியில் மிக நீண்டகாலமாக வரலாற்று ரீதியாக மக்கள் வாழ்ந்த பகுதிகளில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு காணப்படுகின்றது.
கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு, சூரிபுரம் ஆகிய பகுதிகளில் படையினர் வசமிருந்த 528 ஏக்கர் காணிகளில் பிலக்குடியிருப்பு பகுதியில் 42 ஏக்கர் காணிகள் விடுவிகப்பட்டவை தவிர ஏஞ்சியுள்ள 486 ஏக்கர் காணிகளையும் விடுவிக்குமாறு கோரியே இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எங்களது நிலத்தை வழங்க சர்வதேசமும் நல்லாட்சி அரசும் முன்வரவேண்டும் என இந்த மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நிலத்திற்காக போராடும் மக்கள் இரவு பகலாக இராணுவ முகாமின் முன்வாயில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த கேப்பாப்புலவு மக்களின் காணிகள் வரலாற்று ரீதியாக தலைமுறை தலைமுறையாக ஆட்சி செய்யப்பட்ட காணிகள் என்றும் இது எங்களின் மூதாதையர்கள் எங்களுக்கு தந்த சொத்து, இது வேறு யாருக்கும் சொந்தமில்லை.
எங்களது காணிகளை தான் நாங்கள் கேட்கின்றோம். இதை தருவதில் இந்த நல்லாட்சிக்கு என்ன தடையுள்ளது என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் உள்ள 482 ஏக்கர் வரையான காணிகள் படையினர் வசம் இருந்து வருகின்றது. இதனை விடுவிக்க வேண்டும் என மக்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், அரசாங்கம் இதில் வாழும் மக்கள் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக சொந்தமான எந்த தொழில்களும் இன்றி வாழ்வதற்கும் வசதியான வீடுகளும் இன்றியும் அவர்களது கலை கலாச்சாரம், பண்பாடுகளை சிதைக்கும் நடவடிக்கைக்கையாவே இது காணப்படுகின்றது.
சொந்த நிலத்தில் கால்பதிக்கும் வரை போராட்டம் தொடரும்! கேப்பாப்புலவு மக்கள் திட்டவட்டம்....
Reviewed by Author
on
March 16, 2017
Rating:

No comments:
Post a Comment