இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் பாம்பன்மடு கிராம மீனவர்கள் ஐவர் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு.படம்
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட இராமநாதபுரம் பாம்பன் மடு கிராமத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை(3) அதிகாலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் பாம்பன் மடு ஆரோக்கிய நகர் மற்றும் பிரான்சிஸ் நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 5 மீனவர்கள் இலுவைப்படகு ஒன்றின் மூலம் இலங்கை கடல் எல்லையினுள் அத்து மீறி நுழைந்து நேற்று வியாழக்கிழமை மாலை மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
இதன் போது கடல் றோர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் குறித்த மீனவர்களை கைது செய்த நேற்று வியாழக்கிழமை இரவு தாழ்வுபாட்டு கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
-தாழ்வுபாட்டு கடற்படையினர் குறித்த மீனவர்களிடம் விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தள்ளனர்.
-குறித்த மீனவர்களிடம் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரனைகளின் பின் குறித்த மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளனர்.
இராமநாதபுரம் பாம்பன்மடு ஆரோக்கிய நகர் மற்றும் பிரான்சிஸ் நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சார்ளஸ் அஸ்கரிஸ்(வயது-30), அருளானந்தம் அருள் கிரிஸ்தோபர்(வயது-26), ஜோசப் மெஸ்கரின்(வயது-30),அந்தோனி மரியரூபன்(வயது-23),அடைக்கலம் பிரகாஸ்(வயது-23) ஆகிய 5 மீனவர்களுமே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் பாம்பன்மடு கிராம மீனவர்கள் ஐவர் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு.படம்
Reviewed by NEWMANNAR
on
March 03, 2017
Rating:
No comments:
Post a Comment