மன்னார் மதுவரி திணைக்களத்தின் அதிரடி- 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதியுடன் ஒருவர் கைது.(படம்)
மன்னார் மதுவரி திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் தலைமையிலான திணைக்கள உத்தியோஸ்தர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் காரணமாக பரித்தித்துறை ஆணை விழுந்தான் பகுதியில் வைத்து சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதியுடன் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-மன்னார் மதுவரி திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து,வடமாகாண உதவி மதுவரி ஆணையாளர் 1,11 ஆகியோரின் அறிவுரூத்தல்களுக்கு அமைவாக மன்னார் மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் தலைமையிலான திணைக்கள உத்தியோஸ்தர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் பரித்தித்துறை ஆணை விழுந்தான் பகுதியில் வைத்து 6 கிலோ 94 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதியுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
-மீட்கப்பட்ட கேரள கஞ்சா சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்தது என தெரியவந்துள்ளது.
-கைது செய்யப்பட்ட நபர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பரித்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மீட்கப்பட்ட கஞ்சாப்பொதியை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மன்னார் மதுவரித்திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மதுவரி திணைக்களத்தின் அதிரடி- 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதியுடன் ஒருவர் கைது.(படம்)
Reviewed by NEWMANNAR
on
April 12, 2017
Rating:

No comments:
Post a Comment