விக்னேஸ்வரன் விடயத்தில் தலையிடப்போவதில்லை! ஜனாதிபதி....
வடமாகாண முதலமைச்சர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையில் மத்திய அரசாங்கம் தலையிட விரும்பவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஊழலுக்கு எதிராக செயற்பட்டு வரும் நல்லாட்சி அரசில், ஊழல் தொடர்பான வடக்கு முதலமைச்சரின் விடயத்தில் தலையிடுவது பொறுத்தமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பிலான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை, ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை ஆளும் கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில், வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விக்னேஸ்வரன் விடயத்தில் தலையிடப்போவதில்லை! ஜனாதிபதி....
Reviewed by Author
on
June 16, 2017
Rating:

No comments:
Post a Comment