தமிழ் தின கட்டுரை வரைதல் போட்டி! தேசிய மட்டத்தில் முல்லை மாணவர்கள் சாதனை....
மாகாண மட்ட தமிழ்தின கட்டுரை வரைதல் போட்டியில் முல்லைத்தீவு குமுழமுனை ம.வி மாணவிகளான பிரிவு 2ல் இருந்து பகீரதன் லாசன்ஜா, பிரிவு 5ல் இருந்து சிவலோகநாதன் சதுசியா ஆகிய இருவரும் பங்கு பற்றி முதலாமிடத்தை பெற்றுள்ளனர்.
குறித்த போட்டி நிகழ்வு கொழும்பு டி.எஸ் சேனநாயக்க கல்லூரியில் தேசிய ரீதியாக நேற்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த மாணவர்களின் சாதனை குமுழமுனை ம.வி க்கும், முல்லை வலயத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்திருக்கின்றது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர்கள் கல்வியில் மென்மேலும் சிறக்க பாடசாலை சமூகத்தினர் வாழ்த்தியுள்ளனர்.
தமிழ் தின கட்டுரை வரைதல் போட்டி! தேசிய மட்டத்தில் முல்லை மாணவர்கள் சாதனை....
Reviewed by Author
on
July 11, 2017
Rating:

No comments:
Post a Comment