அண்மைய செய்திகள்

recent
-

கலிபோர்னியா காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு - 1,75,000 மக்கள் வெளியேற்றம்


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 8 நகரங்களில் எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவி வருகிறது. அங்குள்ள நபா, சோனோமா, யுபா, மென்டோசினோ உள்ளிட்ட 8 நகரங்களில் காட்டுத்தீ எரிகிறது. இப்பகுதிகளில் திராட்சை பழம் அதிக அளவில் விளைகின்றன. எனவே இங்கு ஒயின் தொழிற்சாலைகள் பெருமளவில் உள்ளன. இங்கு வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் தீ பிடித்தது. பலத்த காற்று காரணமாக தீ நகரப் பகுதிகளுக்கும் பரவுகிறது.

எனவே வனப்பகுதிகளை ஒட்டி தங்கியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது கலிபோர்னியாவில் 8 நகரங்களில் காட்டுத்தீ எரிந்து கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தொடர்ந்து 14 காட்டுத்தீக்கள் அந்த மாகாணத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீர் என்று ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ தற்போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருகின்றது. சாண்டா ரோசாவின் நகரத்திற்குள்ளும் தற்போது இந்தக் காட்டுத் தீ பரவி உள்ளது. இதனால் இரண்டே நாட்களில் நகரத்தில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பகுதிகள் அழிந்து போய் உள்ளது.

தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. காற்று வேகமாக வீசுவதால் தீ பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே 2000 கட்டிடங்கள் மற்றும் வீடுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளன. இந்த தீ விபத்தால் இது வரை 175,000 பேர் கலிபோர்னியாவை விட்டு வெளியேறி இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் 15 பேர் தீயிற்கு இரையாகி பலியாகியுள்ளனர். மேலும் 1000 கணக்கானோர் மருத்துமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

12 மணி நேரத்தில் 20,000 ஏக்கர் நிலத்தை மொத்தமாக அழித்துள்ள இந்தக் காட்டுத் தீ, நகரத்தில் இருக்கும் பல மருத்துவ மனைகளை சூறையாடி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் அது தற்போது மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் சாண்டா ரோசா அரசு மருத்துவமனையையும் நெருங்கி வந்துள்ளது. அந்த மருத்துவமனையில் மிக அதிக அளவில் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த மருத்துவமனையில் தீ பற்றினால் அது வெடிக்கும் அபாயம் உள்ளது என கருதப்படுகிறது.

இந்த காட்டுத்தீ சம்பவத்தை தொடர்ந்து கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் (செப்டம்பர்) லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பயங்கர காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

கலிபோர்னியா காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு - 1,75,000 மக்கள் வெளியேற்றம் Reviewed by Author on October 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.