அண்மைய செய்திகள்

recent
-

கனடாவில் திடீரென காணாமல் போன தமிழ் பெண்!


கனடாவில் தமிழ் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>யோகேஸ்வரி யோகலிங்கம் என்ற 88 வயதுடைய பெண் நேற்று காலை 6 மணியில் இருந்து காணாமல் போயுள்ளார்.

கனடா நியூ மார்க்கெட் நகரத்தில் காணாமல்போன வயோதிப பெண்ணை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.Leslie தெரு மற்றும் St. John’s Sideroad பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளார். எனினும் அவர் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது குடும்பம் மற்றும் பொலிஸார் அவரது நலன் தொடர்பில் அக்கறை காட்டுகின்றனர். யோகேஸ்வரி அந்த பகுதிக்கு நன்கு பழக்கப்பட்டவர் என்ற போதிலும் சற்று குழப்பமடைந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.நேற்றிரவு வசிப்பிட பகுதியில் அவரை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று காலை வரையிலும் தொடர்ந்துள்ளது.

வசிப்பிட பகுதியில் உள்ளவர்களின் வீடுகளில் அவரை தேடி பார்க்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். விசாரணைகளுக்கு உதவக்கூடிய தகவல் இருந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ளும்படி பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.<
அவர் பொது நிறத்துடனான 88 வயது பெண் எனவும், தலை முடி வெள்ளையாக காணப்படும் எனவும் 5 அடி உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் அங்க அடையாளங்களை வெளியிட்டுள்ளனர்.

கனடாவில் திடீரென காணாமல் போன தமிழ் பெண்! Reviewed by Author on October 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.