ஹிட் லிஸ்டில் பிரித்தானியா இளவரசர் ஜார்ஜ்: ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் -
பிரித்தானியா இளவரசர் ஜார்ஜ் கொல்லப்படுவார் என்று ஐ.எஸ்.தீவிரவாதிகள் சமூகவலைதளம் மூலம் மிரட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரித்தானிய இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதியின் 4 வயது மகனான இளவரசர் ஜார்ஜ் கொல்லப்படுவார் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் சமூகவலைதளம் மூலம் மிரட்டியுள்ளதாக, பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், இளவரசர் ஜார்ஜ் படிக்கும் பள்ளிக்கு அருகே அவர் நிற்பது போன்ற புகைப்படத்தினை டெலகிராம் மெசேஜிங் ஆப்-பில் பள்ளி சீக்கிரமே தொடங்கிவிட்டது என்ற தலைப்பில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அப்புகைப்படத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் சூழ போர் வரும்போது, நம்பிக்கையுடன் பதிலடி கொடுப்போம் என்ற வாசகங்கள் அரபு மொழியில் இடம்பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. லண்டனில் உள்ள கென்ஸிங்டன் அரண்மனையில் தனது குடும்பத்தினருடன் வசித்துவரும் இளவரசர் ஜார்ஜ், வீட்டுக்கு அருகில் இருக்கும் தாமஸ் பேட்டர்ஸீ பள்ளியில், தொடக்கக் கல்வி பயிலத் தொடங்கியிருக்கிறார்.
ஜார்ஜ் படித்து வரும் பள்ளியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பிரித்தானியா உளவுத்துறை தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகள் இது போன்ற மிரட்டலை விட்டுள்ளதால் பள்ளியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிட் லிஸ்டில் பிரித்தானியா இளவரசர் ஜார்ஜ்: ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் -
Reviewed by Author
on
October 30, 2017
Rating:

No comments:
Post a Comment