கூவி அழைத்துக் கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்கள் சாகாதோ!
யுத்தம் முடிந்த கையோடு புற்றீசல் போல வட மாகாணத்துக்குள் நுழைந்த நிதி நிறு வனங்கள் கடன்கொடுத்து தமிழனைக் கந்த றுக்கச் செய்வதையே தங்கள் தொழிலாகக் கொண்டன.
கடன் வாங்கலையோ; கடன் வாங்கலையோ, லீசிங் அடிப்படையில் வாகனம் வாங்கலையோ; வாகனம் வாங்கலையோ, வீட்டுக் கடன் தரு கிறோம், சொத்துக் கடன் தருகிறோம், இருவர் பிணை நின்றால் எந்தக் கடனும் தருகிறோம் என்று கடன்படுவதை ஊக்கிவிக்கின்ற நிதி நிறுவனங்களை சாகடிக்காமல் வட மாகாண த்தை வாழ வைக்க முடியாதென்பதே உண்மை.
அரச திணைக்களங்கள், பாடசாலைகள், கூட்டுஸ்தாபனங்கள் என எங்கும் தேடிச் சென்று கூட்டம் வைத்து எந்தத் தாமதமும் வேண்டாம் உடனடியாக இரண்டு இலட்சம் கடன் தருகிறோம். சம்பளத்தில் கழித்து எடுக் கிறோம் என்று மக்களைக் குழப்பி ஆசை வார் த்தை காட்டி கடனைக் கொடுத்துவிட,
வந்த கடன் பணம் எப்படி? எங்கே? போனது என்பது தெரியாமல்போக, மாதாமாதம் கட்டுப் பணமும் வட்டியுமாக மாதச் சம்பளத்தை வெட்டி எடுக்க, மாதச் சம்பளத்தில் நேர்த்தியாக நடந்த சீவியம் சிதைந்து போனது.
இது தமிழ் அரச உத்தியோகத்தர்கள் மீது கடன் கிருமி தொற்றிக் கொடுக்கின்ற துன்பம்.
மறுபுறத்தில் நிரந்தர வேலையற்று இருந்த இளைஞர்களிடம் துண்டுப்பிரசுரம் கொடுத்து லீசிங் முறையில் மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள் தரலாம் என்று ஆசை காட்ட, அவர்களும் நான்கு ஐந்து இலட்சம் பெறுமதி யான மோட்டார் சைக்கிளை வாங்கி வீதிகளில் சாகசம் காட்டி பெற்ற தாயின் ஒற்றைச் சங் கிலியை விற்று லீசிங் கட்டி அரைப் பருவத்தில் மோட்டார் சைக்கிளைப் பறிகொடுத்துவிட்டு சுகமாக இருந்த வீட்டை ஓலமிட வைக்க,
வர்த்தக சமூகத்தில் நுழைந்த நிதி நிறு வனங்கள் அள்ளு கொள்ளையாக கடன் வழங்கி அவர்களின் உடைமைகளை உயில் எழுதி வாங்கிக் கொண்டு முதலாம் முறை ஏலம், இரண்டாம் முறை ஏலம், மூன்றாம் முறை ஏலம் என்று தமிழனின் பொருளாதாரத்துக்கு ஏலம் போடும் அக்கிரமத்தை அடக்குவதற்கு யாருளர்?
இவை எல்லாம் முடிந்து போக இப்போது பெட்டியில் இருக்கும் தமிழனின் பூட்டுக்காப்பு முதல் கட்டிய தாலி வரை அடகு வாங்க வர் ணத் துண்டுப்பிரசுரம் வடக்கு மாகாணம் முழு வதிலும் ஒட்டிக் கொள்கிறது.
22 கரட், 24 கரட் உடன் கையில் காசு வாருங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் தங்க நகைகளை எங்களிடம் தாருங்கள் என்று விளம்பரம் செய்து தமிழனின் தங்க நகை களையும் கபளீகரம் செய்யும் ஏற்பாடுகள் அத் தனையும் நடந்தாயிற்று.
விவசாயத்துக்கு மானியம்; கடற்றொழி லுக்கு உதவி; குடிசைக் கைத்தொழிலுக்கு சன் மானம்; கைத்தொழில் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பு என விளம்பரம் செய்து வட மாகாணத் தின் பொருளாதாரத்தைக் கட்டியயழுப்ப வேண் டிய நிதி நிறுவனங்கள் தமிழனைக் கயிற்றில் தொங்கவிட்டு வேடிக்கை பார்க்கிறது.
இந்த அக்கிரமத்து அமைப்புக்கள் சாகா விட்டால் சாவை சாகடிக்க முடியாது.
கூவி அழைத்துக் கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்கள் சாகாதோ!
Reviewed by Author
on
October 30, 2017
Rating:

No comments:
Post a Comment