வடகொரியாவில் 200 பேர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல் -
வட கொரியாவில் அணு ஆயுத சோதனை மையத்தில் ஏற்பட்ட விபத்தில் 200 பேர் உயிரிழந்துவிட்டதாக ஜப்பானை சேர்ந்த தொலைக்காட்சி Asahi செய்தி வெளியிட்டுள்ளது.செப்டம்பர் 3 ஆம் திகதி வட கொரியாவின் ஆறாவது அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. அதன்போது 100 கிலோ எடை கொண்டு வெடிகுண்டு சோதனை செய்தனர்.
இது இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா மீது குண்டு வீசப்பட்ட வெடிகுண்டை விட சக்திவாய்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடகொரியாவின் மலைப்பகுதிகளின் அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், வடகொரியாவின் பன்ஜி அணு ஆயுத சோதனை மையத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது பணியில் ஈடுபட்டிருந்த 200 பணியாளர்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகொரியாவில் 200 பேர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல் -
Reviewed by Author
on
November 01, 2017
Rating:

No comments:
Post a Comment