அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியா விலகினால் 75,000 வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும்


ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிய பின்னர் இங்கிலாந்து வங்கியின் நிதி சேவைகள் 75,000 வேலைகளை இழக்க நேரிடும் என பிபிசியின் பொருளாதார ஆசிரியர் Kamal Ahmed தெரிவித்துள்ளார்.</p><p>இங்கிலாந்து வங்கியில் UK-EU நிதி சேவைகள் ஒப்பந்தம் எவையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வங்கியின் ஆளுநர் சாம் வுட்ஸ் விளக்கமளித்துள்ளதாவது, மாத தொடக்கத்தில் இங்கிலாந்து வங்கியில் 10,000 வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்படும் என கணக்கெடுப்பு ஒன்று வெளியானது.

ன் பிரித்தானிய மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களை பொறுத்தே, நிதி சேவைகள் வேலை இழப்பின் நீண்ட கால தாக்கம் இருக்கும்.ஆனால், வரவிருக்கும் காலங்களில் உலகின் மிகப்பெரிய நிதி மையங்களில் ஒன்றாக லண்டன் தொடரும் என்று தான் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.பிரித்தானியாவின் நிதியியல் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறை 1.1 மில்லியன் மக்களைப் பயன்படுத்துகிறது, பலர் எல்லைப்புற சேவைகளுக்கு பதிலாக உள்நாட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகின்றனர்.இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகினால் இவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

பிரித்தானியா விலகினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஏற்கனவே நாடாளுமன்றத்தில் எங்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், பிரித்தானியா அடிப்படையிலான நிதி சேவைகள் தற்செயல் திட்டங்கள் தயாரிப்பதில் தற்போதே கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சில நிறுவனங்கள் லண்டன் ஊழியர்களை வெளிநகர்த்துவது அல்லது ஐரோப்பாவில் மற்ற இடங்களுக்கும் தங்கள் பணிகளை விரிவாக்கத் தொடங்கியிருக்கின்றன.
பிற நிறுவனங்கள், 2018 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பித்தானியா இடையே ஏற்படவிருக்கும் முடிவுகள் குறித்து எதிர்பார்த்திருக்கின்றன என தெரிவித்துள்ளார்.



பிரித்தானியா விலகினால் 75,000 வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும் Reviewed by Author on November 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.