ஏ9 வீதியில் மதுபோதையில் பயணித்த இளைஞர்கள் இருவர் பரிதாபமாக பலி -
ஏ9 வீதியின் நுணாவில் பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பேருந்துடன் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தினம்(26) இரவு 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இன்று இரவு 9.15 மணியளவில் பேருந்துடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்த போது இருவரும் உயிரிழந்திருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில், மீசாலை மத்தியை சேர்ந்த சதீஸ்குமார்(வயது 37) என்ற இளைஞரும் மோகன்ராய்(வயது 33) என்பவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
இதேவேளை, விபத்துடன் தொடர்புடைய சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ஏ9 வீதியில் மதுபோதையில் பயணித்த இளைஞர்கள் இருவர் பரிதாபமாக பலி -
Reviewed by Author
on
November 27, 2017
Rating:

No comments:
Post a Comment