முல்லைத்தீவு கடலில் இருளில் வந்த மர்மப்படகுகளால் குழப்பம்....
முல்லைத்தீவு கடற்பரப்பில் மர்மப்படகுகளின் நடமாட்டம் காணப்படுவதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது இருள் சூழ்ந்துள்ள சந்தர்ப்பத்தில் மூன்று திசைகளில் இருந்து திடீரென வெளிச்சம் தோன்றியமையால் மீனவர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் சட்டவிரோதப்படகுகள் வந்திருக்கலாம் என்று மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் கடற்படையினர் அங்கு விரைந்துள்ளனர். குறித்த கடல்பகுதியில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலாளர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் இன்று இவ்வாறு மர்ம படகுகளின் நடமாட்டம் தென்படுவதாக மீனவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு கடலில் இருளில் வந்த மர்மப்படகுகளால் குழப்பம்....
Reviewed by Author
on
November 29, 2017
Rating:

No comments:
Post a Comment