அண்மைய செய்திகள்

recent
-

தமி­ழர்­கள் சிந்­திக்க வேண்­டிய தரு­ண­மிது....... வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்

தமிழ் மக்­க­ளில் பெரும்­பா­லோர் எதிர்­பார்த்­தமை போன்று கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான கூட்­டணி அமைக்­கப்­பட்­டுள்­ளது. கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வில­கிச் சென்ற சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ர­னும், கஜேந்­திரகுமா­ரும் இணைந்து இந்த முன்­ன­ணியை உரு­வாக்­கி­யுள்­ள­னர்.
தமிழ் மக்­கள் பேர­வை­யும் இந்த முன்­ன­ணிக்கு ஆத­ரவு தெரி­விக்­கு­மென நம்­பப்­ப­டு­கி­றது. தமிழ் மக்­கள் பேரவை அமைக்­கப்­பட்­ட­போது அது கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான அமைப்­பொன்­றா­கவே கரு­தப்­பட்­டது. ஆனால் கூட்­ட­மைப் பைச் சேர்ந்த வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் பேர­வை­யு­டன் இணைந்து கொண்­டார்.

பேர­வை­யின் இணைத்­த­லை­வர்­க­ளில் ஒரு­வ­ரா­க­வும் தெரிவு செய்­யப்­பட்­டார். இவ­ரை­விட தமி­ழ­ர­சுக் கட்சி தவிர்ந்த கூட்­ட­மைப்­பின் ஏனைய பங்­கா­ளி­க­ளும் பேர­வைக்­குள் சங்­க­ம­மா­கி­னர். அப்­போது கூட்­ட­மைப்­பின் தலைமை இதைக் கண்டு கொள்­ள­வே­யி்ல்லை. அர­சி­ய­லுக்­குள் நுழை­கின்ற எண்­ணம் பேர­வைக்கு இல்­லை­யென அதன் முக்­கி­யஸ்­தர்­கள் அப்­போது தெரி­வித்­த­னர்.
அர­சி­யல்வாதி­க­ளின் பங்­க­ளிப்­பு­டன் உரு­வாக்­கப்­பட்ட தமிழ் மக்­கள் பேரவை அர­சி­ய­லில் ஈடு­ப­டா­தெ­னத் தெரி­வித்த கருத்­தைப் பலர் அப்­போது நம்­ப­வில்லை.தற்­போது பேர­வை­யின் கபட நோக்­கம் அம்­ப­ல­மா­கி­யுள்­ளது.
பேரவை அர­சி­யல் செயற்­பா­டு­க­ளில் கலந்­து­கொள்­ளா­தென வழங்­கப்­பட்ட உறு­தி­மொழி
தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­க­ ளுக்­குத் தீர்வு காண்­ப­தற்­கா­கவே அர­சி­யல் கலக்­காத வகை­யில் பேரவை உரு­வாக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­வித்­தார்­கள். இன்று அர­சி­யல் கூட்­ட­ணிக்கு அந்­தப் பேரவை ஆத­ரவு தெரி­விக்­கின்­றமை தமிழ்­மக்­களை ஏமாற்­று­கின்­ற­தொரு செய­லா­கக் கொள்­ளத்­தக்­க­தா­கும். இத்­த­கை­ய­வர்­கள் மக்­க­ளுக்கு விசு­வா­ச­மாக நடந்து கொள்­வார்­கள் என்­பதை எந்த வகை­யி­லும் நம்ப இயலாதுள்ளது. இதே­வேளை தமிழ்­மக்­கள் பேர­வை­யின் அர­சி­யல் செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்­கும் வகை­யில் புளொட் அமைப்பு நடந்து கொண்­டுள்­ளது. உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல்­கள் தொடர்­பாக பேர­வை­யால் கூட்­டப்­பட்ட கூட்­டத்­தில் அந்­தக் கட்­சி­யைச் சேர்ந்த பிர­தி­நி­தி­கள் எவ­ரும் கலந்து கொள்­ளா­தது இதை உறுதி செய்­துள்­ளது. புளொட், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கின்­றமை குறிப்­பி­டத் தக்­கது.

இதே­வேளை, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் கூட்­ட­ மைப்­பி­லி­ருந்து பிரிந்து சென்று கூட்­டணி அமைத்த சுரேஷ் பிரே­மச்­சந்­தி ­ரனை மறை­மு­க­மா­கச் சாடி­யுள்­ளார். கட்­சி­யின் நலன் கரு­தியே சுரேஷ் தனித்­துப்­போட்­டி­யி­டு­வ­தாக அவர் கூறி­யி­ருப்­பது கவ­னத்­துக்­கு­ரி­யது. இதை­விட புதிய கூட்­டணிக்­கும் தமிழ் மக்­கள் பேர­வைக்­கும் எந்­தத் தொடர்­பும் இல்­லை­யெ­னக் கூறிய அவர், பேரவை கூட்­ட­ணி­யு­டன்­இ­ணை­யாது என­வும் கூறி­யுள்­ளார்.
முத­ல­மைச்­சர் தமது கருத்­துக்­க­ளைச் சொல்­லில் மட்­டு­மல்­லாது செய­லி­லும் மக்­க­ளி­டம் நிரூ­பித்­துக் காட்­ட­வேண்­டிய தேவை தற்­போது எழுந்­துள்­ளது. அவர் தமது விசுவாசத் தன்­மையை நிரூ­பிக்க வேண்­டு­மா­னால் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின்­போது கூட்­ட­மைப்­புக்கு ஆத­ர­வான பரப்­பு­ரை­க­ளி்ல ஈடு­பட வேண்­டும்.புதிய கூட்­ட­ணிக்கு எதி­ரான கருத்­து­க­ளைப் பகி­ரங்­க­மா­கத் தெரி­விக்க வேண்­டும்.

கூட்­ட­மைப்­பின் வெற்­றிக்­காக உழைப்­பதே இவ­ரது பிர­தான கட­மை­யா­க­வும் அமைந்­தி­ருத்­தல் வேண்­டும். கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்­போது அவர் விட்ட தவ­று­க­ளுக்கு இது­வொரு பிரா­யச்­சித்­த­மா­க­வும் அமை­யக் கூடும்.பேரவை குறித்த எதிர்­பார்ப்பு காலப்­போக்­கில் பிசு­பி­சுத்­துப் போனது
தமிழ் மக்­கள் பேரவை தொடர்­பாக ஆரம்­பத்­தில் பெரி­ய­தொரு எதிர்­பார்ப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­பதே அதன் முக்­கி­ய­மான நோக்­க­மெ­ன­வும் கூறப்­பட்­டது.தீர்­வுத் திட்­ட­ மொன் றை­யும் பேரவை தயா­ரித்­தி­ருந்­தது. ஆனால் செயல்­வ­டி­வைப் பொறுத்­த­வ­ரை­யில் எதை­யுமே அத­னால் சாதிக்க முடி­ய­வில்லை என்­பதை ஒப்­புக்­கொண்டே ஆக வேண்­டும். தற்­போது பேர­வை­யி­லும் பிள­வு­கள் தோன்­று­வ­தற்­கான அறி­கு­றி­கள் காணப்­ப­டு­கின்­றன.
இதே­வேளை தமிழ்த் தலைமை களது மோச­மான அர­சி­யல் நிலைப்பாட்டுக்கு முற்­றுப் புள்ளி வைக்­கவே புதிய கூட்­டணி உரு­வாக்­கப்­பட்­ட­தாக தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வ­ரான கஜேந்­தி­ர­கு­மார் தெரி­வித்­தி­ருக்­கி­றார். உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் இடம்­பெ­றப்­போ­கும் நிலை­யில்­தான் தமிழ்த் தலை­மை­க­ளது அர­சி­யல் நிலைப்­பாடு மோச­மான ஒன்­றாக அவ­ரது கண்­க­ளுக்­குத் தெரி கின் றதா? என மக்­கள் கேள்வி எழுப்­பு­கின்­ற­னர்.
மேலும் இந்­தக் கூட்­ட­ணிக்­குக் கிடைக்­கப்­போ­கும் ஆத­ர­வைப் பொறுத்தே அதன் மீதான நம்­ப­கத் தன்­மையை உறுதி செய்து கொள்ள முடி­யும்.
இதே வேளை சரி­யான தலை­மைத்­து­வத்­து­டன் ஒரு புதிய கூட்­டணி அமைக்­கப்­பட வேண்­டு­மென சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் தெரி­வித்­துள்­ளார்.
வடக்கு மாகா­ண­ச­பை­யில் குழப்­பங்­கள் ஏற்­பட்­ட­போது மாற்­றுத் தலைமை தொடர்­பான சிந்­தனை சில­ரி­டையே எழுந்­தது. ஆனால் தலை­மைக்கு எவ­ருமே அடை­யா­ளம் காட்­டப்­ப­ட­வில்லை.தமி­ழ் அரசுக் கட்சி மீதான அதி­ருப்­தித் தரப்­பி­னர் புதிய கட்­சி­யொன்றை ஆரம்­பிக்க முயற்சி
இந்த நிலை­யில் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யு­டன் முரண்­பட்ட சிலர் அதற்கு மாற்­றீ­டாக புதிய கட்­சி­யொன்றை ஆரம்­பிக்­க­வுள்­ள­தா­க­வும் தக­வல்­கள் கிடைத்­துள் ளன. தமி­ழர்­கள் மேன்­மே­லும் பிள­வு­பட்டு நலி­வ­டை­யப் போவ­தையே இது எடுத்­துக் காட்­டு­கின்­றது.

அன்­றி­லி­ருந்து இன்­று­வரை தமி­ழர்­கள் ஒரு­போ­தும் ஒற்­று­மை­யாக இருந்­த­தில்லை. இதன் கார­ண­மா­கத் தோல்­வி­களை அவர்­கள் எதிர்­கொள்ள நேர்்ந்­தது.
தோல்­வி­க­ளி­லி­ருந்து பாடம் படிக்­கும்­போ­து­தான் வெற்­றிப்­ப­டி­களை நெருங்­க­மு­டி­யும். தற்­போ­தைய நில­வ­ரத்­தைப் பார்க்­கும் போது தமி­ழர்­கள் வெற்­றிப் படி­களை நெருங்க எந்­த­வி­தத்­தி­லும் சந்­தர்ப்­பம் வாய்க்­கப் போவ­தில்லை என்­பது மிகத் தௌிவா­கத் தெரி­கின்­றது.
கூட்­ட­மைப்­புக்கு மாற்­றீ­டாக வேறொரு அணி உரு­வா­கும்­வ­ரைத் தமிழ் மக்­கள் கூட்­ட­மைப்­பின் மீதே நம்­பிக்கை வைத்­துச் செயற்­பட்­டாக வேண்­டும். கூட்­ட­மைப்­பைப் பிள­வு­ ப­டுத்­து­வ­தால் தமிழ்­மக்­க­ளின் பிரச்­சி­னைக்­குத் தீர்வு கிடைத்து விடு­மென எவ­ருமே நினைத்து விடக்­கூ­டாது. மாறாக புதிய பிரச்­சி ை­னை­கள் தோன்­றி­வி­டும்.
தமி­ழர்­கள் வெறும்­உ­ணர்ச்சி வேகத்­துக்கு இரை­யா­காமல் அறிவு பூர்­வ­மா­கச் சிந் திக்­க­வேண்­டிய தரு­ணத்­தில் உள்­ள­னர்.இதில் தவ­றி­வி­டு­வார்­க­ளா­யின் அவர்­க­ளது எதிர்­கா­லமே பாழ­கிப்­போய் வி­டும் அபாயமுண்டு.

தமி­ழர்­கள் சிந்­திக்க வேண்­டிய தரு­ண­மிது....... வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் Reviewed by Author on November 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.