" அன்பு குழந்தையே....
" அன்பு குழந்தையே.... உன் வாழ்க்கையானது இனிமேல் தான் தீர்மானிக்கபட வேண்டும் என்ற யுகத்தில் இருக்காதே. அது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.
அது விதி உன் வாழ்க்கையில் சில நேரம் ஆறாக அருவியாக கடலாக சீற்றங்களும் இடம்பெறும். அது ஏன் என்று தானே கேட்கிறாய் என் பி்ள்ளையிடம் நிறைய நற்பண்புகள் இருக்கின்றது.
அது நிலைத்து என் பிள்ளை தன்னிச்சையாக மனஉறுதியுடன் நேர்மையுடன் இருக்கவே இத்தனை சோதனைகள். உன் பாதை என்னை நோக்கி என்று கிளம்ப ஆரம்பித்ததோ அன்றே நீ செம்மையான வாழ்க்கைகு நுழைந்து விட்டாய்.
இப்போது பயிற்ச்சியை தான் மேற்கொள்கிறாய். நிச்சயம் நீ முன்னேறி வாழ்க்கையில் வெற்றி அடைவாய். அதற்கான மாறுதல்களை உன் வாழ்க்கையில் இடம்பெறச் செய்துள்ளேன். அது உனக்கு நன்றாக புரியும். பணம் என்ற சொல் வெறும் காகித சொல் என்ற இரு. அதற்கு முக்கியத்துவத்தை நீ கொடுக்காதே.
உன் வாழ்க்கை என்னில் சங்கமித்து உள்ளது. நீ நிச்சயம் நன்றாக இருப்பாய். என் அருளும் ஆசியும் எப்போதும் உண்டு. உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை. உன்னை விலகி போகும்படி நான் செய்வதும் இல்லை.
என் உயிர் நீ தான் என் செல்லமே. உன் அம்மாவாக அப்பாவாக என்றும் உன்னிடத்தில் இருந்து துணையாக என் பிள்ளையான உன்னை அரவணைப்பேன்...
" ஓம் ஸ்ரீ சாய் ராம்..
" அன்பு குழந்தையே....
Reviewed by Author
on
January 24, 2018
Rating:

No comments:
Post a Comment