சிரியாவில் இடம் பெற்று வரும் மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலையை கண்டித்து நாளை மன்னாரில் போராட்டத்திற்கு அழைப்பு-(படம்)
சிரியாவில் இடம் பெற்று வரும் மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலையை கண்டித்து நாளை சனிக்கிழமை(3) காலை மன்னார் மாவட்டச்செயலகத்திற்கு முன்பாக கண்டணப்போராட்டம் இடம் பெறவுள்ளது.
-மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்,அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நாளை காலை 9 மணியளவில் குறித்த போராட்டம் இடம் பெறவுள்ளது. சிரியாவில் இடம் பெற்று வரும் மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலையை கண்டிக்கும் வகையில் குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள்,
பொது மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் இடம் பெற்று வரும் மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலையை கண்டித்து நாளை மன்னாரில் போராட்டத்திற்கு அழைப்பு-(படம்)
Reviewed by Author
on
March 02, 2018
Rating:

No comments:
Post a Comment