கனடாவில் அறிமுகமாகியுள்ள புதிய துப்பாக்கி விதிகள் -
கனடாவில் துப்பாக்கிக் கலாச்சாரம் அமெரிக்காவைவிடக் குறைவாக இருந்தாலும் ஐரோப்பா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளைவிட அதிகமாக உள்ளது.
சமீப காலமாக துப்பாக்கி தொடர்பான குற்றங்கள் கனடாவில் அதிகரித்து வருகின்றன.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற குற்றங்களில், 2,465இல் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன, Torontoவில் 2017 ஆம் ஆண்டில் மட்டும் 392 துப்பாக்கிச் சூடுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
ஏராளமான கிராம மக்களைக் கொண்ட நாடாகிய கனடாவில் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக அதிகம்.
இதனால் அங்கு துப்பாக்கி பயன்படுத்துவது குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.
புதிய துப்பாக்கி விதிகள் நிச்சயம் 2019 தேர்தலில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் Ralph Goodale சட்டப்படி துப்பாக்கி வைத்திருப்பவர்களின் உரிமைகளை அரசு பாதுகாப்பதாகத் தெரிவித்தார்.
புதிய சட்டங்களின் அமசங்களாவான
- துப்பாக்கி வாங்குபவர்கள் முறையான உரிமம் வைத்திருக்க வேண்டும்.
- உரிமம் வழங்குவதற்குமுன் வாங்குபவர் குற்றப்பின்னணியோ, மன நலப் பிரச்சினைகளோ உடையவரா என்பது முதலான விடயங்கள் உறுதி செய்யப்படும்.
- பயணத்தின்போது துப்பாக்கிகளை கொண்டு செல்வதற்கு அதிகாரப்பூர்வ அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
கனடாவில் அறிமுகமாகியுள்ள புதிய துப்பாக்கி விதிகள் -
Reviewed by Author
on
March 22, 2018
Rating:
No comments:
Post a Comment