யாழில் இடம்பெற்ற தந்தை செல்வநாயகத்தின் 41ஆவது நினைவு தின நிகழ்வு -
குறித்த நிகழ்வு இன்று காலை தந்தை செல்வா அறக்காவலர் சபையின் தலைவர் ஓய்வுநிலை பேராயர் ஜெபநேசன் தலைமையில், யாழ் நகரில் அமைத்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது தந்தை செல்வா நினைவுச்சிலைக்கு அரசியல் தலைவர்கள் மலர் மாலை அணிவித்ததுடன், சமாதியிலும் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து நிகழ்வில் நவசமாயவாய கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தந்தை செல்வாவின் நினைவுப் பேருரையை ஆற்றியுள்ளார்.
மேலும், நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம், அமெரிக்கன் மிசன் பேராயர் டானியல் தியாகராஜா மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
யாழில் இடம்பெற்ற தந்தை செல்வநாயகத்தின் 41ஆவது நினைவு தின நிகழ்வு -
Reviewed by Author
on
April 27, 2018
Rating:

No comments:
Post a Comment