தமிழகத்தில் அதிக கவனம் பெற்ற மணப்பெண்ணின் 10 கட்டளைகள் -
இந்த திருமணத்தில் மணப்பெண்ணின் பத்து கட்டளைகள் தான் முக்கியத்துவம்பெற்றுள்ளன.இதற்கு மணமகனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
திருமண பேனரில் வைக்கப்பட்டுள்ள மணப்பெண்ணின் பத்து கட்டளைகள் தமிழகத்தில் அதிகம் கவனம் பெற்றுள்ளது.
- உன்னுடைய மனைவி நானாகிறேன், மற்றொரு காதலி உனக்கு இருக்க கூடாது
- கண்டவரின் மனைவியை பார்த்து சிரிக்க கூடாது. அவளுடைய அழகை குறித்து வர்ணிக்க கூடாது.
- இரவு 8.30 மணிக்கு கிச்சன் க்ளோஸ்.
- இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் க்ளோஸ் க்ளோஸ்.
- தேங்காய் எண்ணை. ஷாம்பு, சோப்பு துண்டு சொந்தமாய் எடுத்துக்கொண்டு போய் குளிக்க வேண்டும். அதற்காக தொந்தரவு செய்யக்கூடாது.
- ஹோட்டல் சாப்பாட்டை நிறுத்தி பழைய சாப்பாடானாலும் வீட்டில் சாப்பிட வேண்டும்.
- தண்ணி அடித்தால் வீட்டிற்கு வெளியே படுத்துக்கொள்ள வேண்டும்
- சாயங்காலம் 6.30 முதல் 9.30 வரை சீரியல் டைம், கூப்பிட்டு தொந்தரவு செய்யக்கூடாது. பச்ச தண்ணி கூட கிடையாது.
- உறக்கத்தில் குறட்டை விடவோ, சத்தம் போடவோ கூடாது.
- மாமியாரின் செயல்பாடுகளுக்கு எவ்வித தயவு தாட்சண்யம் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும்.என்று இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தில் அதிக கவனம் பெற்ற மணப்பெண்ணின் 10 கட்டளைகள் -
Reviewed by Author
on
May 31, 2018
Rating:
No comments:
Post a Comment