அகதி முகாம்களை காலி செய்யும் பிரான்ஸ்: தொடரும் நடவடிக்கைகள் -
பாரீஸின் Porte des Poissonniers மற்றும் Canal Saint Martin ஆகிய இரண்டு அகதி முகாம்களை காலி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பாரீஸ் பொலிஸ் துறை தெரிவித்துள்ளது.
முகாம்களில் மோசமான நிலையில் 1000 அகதிகள் வரை தங்கியிருப்பதாக கருதப்படுகிறது.
பாரீஸின் உள்ளேயும் வெளியேயும் உள்ள முகாம்களுக்கு பேருந்துகளில் அழைத்து செல்லப்படும் அகதிகள் அங்கு தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Porte des Poissoniersஇல் தங்கியிருப்பவர்கள் பெரும்பாலும் சூடான் மற்றும் எரிட்ரியாவைச் சேர்ந்தவர்கள்.
Canal Saint-Martin முகாமில் தங்கியிருப்பவர்கள் ஐரோப்பாவில் வேறு எங்கும் புகலிடம் கிடைக்காத ஆப்கன் அகதிகள்.
கடந்த வாரம் வட கிழக்கு பாரீஸில் உள்ள “Millenaire” முகாமிலிருந்து சுமார் ஆயிரம் அகதிகள் அகற்றப்பட்டனர்.
மீதமுள்ளோர் பாரீஸிலும் பிரான்ஸ் இத்தாலி எல்லையிலும் கூடியிருந்தனர்.
அகதி முகாம்களை காலி செய்யும் பிரான்ஸ்: தொடரும் நடவடிக்கைகள் -
Reviewed by Author
on
June 05, 2018
Rating:

No comments:
Post a Comment