மீண்டும் களமிறங்குகிறார் லசித் மலிங்கா! ரசிகர்கள் உற்சாகம் -
தொடரானது ஜூன் 28-ஆம் திகதி தொடங்கி ஜூலை 15-ஆம் திகதி முடிவடைகிறது.
இதில் மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளது.
டொரண்டோ நேஷனல்ஸ், வாங்கவுர் நைட்ஸ், வின்னிபெக் ஹவுக்ஸ், எட்போண்டன் ராயல்ஸ், மொண்றியல் டைகர்ஸ் என அணிகளுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதில் ஸ்டீவ் ஸ்மித், பொல்லார்ட், டேரன் பிராவோ, அப்ரிடி போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
இலங்கை அணி சார்பாக நான்கு வீரர்கள் தொடரில் பங்கேற்கிறார்கள்.
லசித் மலிங்கா, தஷுன் ஷனகா, திசாரா பெரேரா, இசுரு உடனா ஆகிய நால்வரும் மொண்றியல் டைகர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்கள்.
மீண்டும் களமிறங்குகிறார் லசித் மலிங்கா! ரசிகர்கள் உற்சாகம் -
Reviewed by Author
on
June 06, 2018
Rating:

No comments:
Post a Comment