டிரம்ப்..சதாம் உசேனுக்கு நேர்ந்த கதியைசந்திக்க நேரிடும்: ஈரான் ஜனாதிபதி -
இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானுடன் வர்த்தக உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என, அமெரிக்கா தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஈரான் பல பொருளாதார சிக்கல்களை சந்திக்க வேண்டியதுள்ளது.
ஏற்கனவே, அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ஈரானின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்திருந்தது. இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவுகானி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘1980களில் ஈரான் மீது போர் தொடர்ந்த சதாம் உசேனுக்கு ஏற்பட்ட அதே கதி அமெரிக்காவுக்கும், டிரம்புக்கும் ஏற்படும். அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பயந்து ஏவுகணைகளை நாங்கள் கைவிட முடியாது’ என தெரிவித்துள்ளார்.
இதனை வானொலி மூலம் ஆற்றிய உரையில் ரவுகானி தெரிவித்தார்.

டிரம்ப்..சதாம் உசேனுக்கு நேர்ந்த கதியைசந்திக்க நேரிடும்: ஈரான் ஜனாதிபதி -
Reviewed by Author
on
September 23, 2018
Rating:
No comments:
Post a Comment