ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி ஆளுநருக்கு கடிதம்!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
நீண்ட நாட்களாக சிறையில் தவிக்கும் அவர்களை விடுதலை செய்ய கோரி காங்கயத்தில் புரட்சிகர முன்னணி சார்பில் தமிழக ஆளுநர் பன்வாரிலாலுக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
காங்கயம், வெள்ளகோவில், நத்தகாடையூர் பகுதியை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் இதில் பங்கேற்று ஆளுநருக்கு மனு அனுப்பினார்கள்.
புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகி திருநாவுக்கரசு தலைமையில் இந்த மனு அனுப்பப்பட்டது.
காங்கயம் தபால் நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. நிர்வாகிகள் குழுக்களாக பிரிந்து வந்து மனுக்களை அனுப்பினார்கள்.
ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி ஆளுநருக்கு கடிதம்!
Reviewed by Author
on
October 18, 2018
Rating:
Reviewed by Author
on
October 18, 2018
Rating:


No comments:
Post a Comment