மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரனை ஜனவரி 14 ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு-(படம்)
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரனைகள் இன்று 23-11-2018 வெள்ளிக்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் விசாரனைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த விசாரனைக்கான கட்டளை எதிர் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.
மாந்தை மனித புதை குழி தொடர்பான வழங்கு விசாரணையின் போது காணாமல் போன உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரனை இன்று வெள்ளிக்கிழமை23-11-2018 மன்னார் நீதிமன்றத்தில் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதோடு தீர்ப்பிற்காக காணப்பட்டது.
-குறித்த வழக்கு B/778-2013 என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் வழக்கு விசாரனைகள் இடம் பெற்று வந்தது.
இதன் போது மாந்தை மனித புதைகுழியில் இருந்து ஏற்கனவே எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இலங்கையில் எந்த பல்கலைக்கழகங்களிலும், நிறுவனங்களிலும் ஆய்வு செய்ய முடியாது என்ற அடிப்படையில் அந்த மனித எச்சங்கள் காபன் பரிசோதனைக்காக வெளிநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் எந்த நாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு தொடனர் தரப்பிலும்,காணாமல் போனவர்களின் உறவினர்கள் தரப்பிலும் விவாதங்களை ஏற்றுக்கொண்டு, நீதிபதி கட்டளையை வழங்க இருந்தார்.
ஆனால் இன்றைய தினம் கட்டளை வழங்கப்படவில்லை.
மன்னார் நீதவான் ரி.சரவணராஜா இன்றைய தினம் விடுமுறையில் இருந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
இன்றைய தினம் பதில் நீதவானினால் குறித்த வழக்கிற்கான கட்டளை ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழங்கப்படும் என தவணையிடப்பட்டது.
குறித்த வழக்கு விசாரனைக்காக மன்றில் சிரேஸ்ட அரச சட்டத்தரணி நவாவி பிரசன்னமாகி இருந்ததோடு,குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் மன்றில் பிரசன்னமாகி இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரனை ஜனவரி 14 ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு-(படம்)
Reviewed by Author
on
November 23, 2018
Rating:
No comments:
Post a Comment