காலம் கடந்தும் மைத்திரிக்கு இருக்கும் ஒரேயொரு வாய்ப்பு!
அதிகார மோகத்தில் மக்களையும், நாட்டினையும் மறந்து ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டில் இடி விழுந்தாலும் பரவாயில்லை. நான் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்றே ஜனாதிபதி நினைக்கின்றார் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று ரூபாவின் விலை பாரிய அளவில் வீழ்ச்சி கண்டு வருகின்றது.
கடன் சுமை அதிகரித்து வருகின்றது. இதனை பொதுமக்களே சுமக்க வேண்டியுள்ளது. ஆகவே சட்டவிரோத பிரதமர் ஒருவரை வைத்துகொண்டு ஜனாதிபதி ஆட்சி செய்து வருகின்றார்.
இன்றும் நாம் எமது பெரும்பான்மையை நிரூபித்துவிட்டோம். எனவே ஜனாதிபதி இப்போதே அரசியல் அமைப்பினை மீறி நாட்டினை நாசமாக்கிவிட்டார். ஆனால் இப்போதும் காலம் உள்ளது.
ஜனாதிபதி விட்ட தவறை சரிசெய்ய ஒரு வாய்ப்பு உள்ளது. காலம் கடந்துவிட்டது. ஆனால் காலம் கடந்தேனும் அவர் மக்களுக்காக ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
காலம் கடந்தும் மைத்திரிக்கு இருக்கும் ஒரேயொரு வாய்ப்பு!
Reviewed by Author
on
November 24, 2018
Rating:

No comments:
Post a Comment