அண்மைய செய்திகள்

recent
-

சமகால சூழலில் தமிழ் மக்களை விழிப்புணர்வுடன் செயற்படுமாறு மன்னார் பிரஜைகள் குழு

 மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருள்பணி.அ.ஞானப்பிரகாசம் அடிகளார் அவர்கள் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் ஆளுனர் சபை உறுப்பினர்களுடன் இணைந்து இவ் அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட பிரஜைகள்குழு தமிழ் மக்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையில் அன்பான மக்களே கடந்த வாரங்களாக இன்நாட்டிலே ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகள் அதைனை தொடர்ந்து ஏற்பட்டுவரும் தொடர்சியான ஜனநாயக மறுப்பு ஏதோச்சாதிகாரச்சூழல் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களையும் சந்தேகங்களையும் அச்சங்களையும் தோற்றுவித்ததோடு நாட்டின்மீதும் அரசுமீதும் ஜனநாயகத்தின் மீதும் வெறுப்பும் கசப்பும் விரக்த்தியான சூழலும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையிலை மக்கள் செய்வதறியாது திகைத்தது நிற்கின்றனர் கடந்த மூன்றாண்டுகக்கு முன்னர் பலவிதமான வாக்குதிகளையும் நம்பிக்கைகளையும் எதிர்பார்புளையும் உங்களுக்கு தந்து மக்களின் வாக்குகளைபெற்று ஆட்சியமைத்தவர்களால் எதுவித நன்மைகளையோ நீதியையோ தமிழ் மக்களதுவாழ்வில்
செய்யாது அனைத்து வாக்குறுதிகளும் வெற்றுவாக்குதிகளாகிவிட்ட சூழலில்
தற்போதய அசாதாரண அச்சமிக்க சூழல் இன்நாட்டின் பெறுப்புமிக்கவர்களால்
வலிந்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இவைகளுக்கு மத்தியில் ஒவ்வவொரு
தரப்பினரும் ஒருவர்மீது ஒருவர் மாறிமாறி பழி சுமத்துவதிலும்
சேறடிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர் மக்களினானால் தெரிவு செய்யப்பட்ட
மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பற்றவர்களாய் ஜனநாயக மறுப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவது குறிப்பாக ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நாட்டின் அதியரமன்றமாகிய நாடளுமன்றத்தினுள் நடந்த வன்முறையும் அராஜகமான செயற்பாடுகளும் வேலியே பயிரை மேய்ந்த செயலாகிவிட்டது.

எனவே அன்பார்ந்த மக்களே ஒருநாட்டின் மிகபெரும் சக்கி மக்களே ஆவர்
மக்களின் எழுற்சியும் புரட்சியுமே அன்நாட்டின் ஏற்றமும் விருத்தியுமாகும்
மிகவும் இக்கட்டாக இந்த சூழலில் நீங்கள் மிகவும் நிதானத்துடனும்
பொறுப்புணர்சியுடனும் சிந்திக்க வேண்டிய நேரமாகும் அரசியலில்
இருப்பவர்கள் தமது அரசில் லாபங்களுக்காகவும் தம்முடைய இருப்பபுக்களை
தக்கவைப்பதற்காகவும் கூறும் பொய்பிரச்சாரங்களுக்கோ போலித்தனமான
கொள்கைகளுக்கோ எடுபடாமல் அமைதியுடனும் நியாயத்துடனும் சிந்தித்து கடந்த காலந்திலும் நிகழ்காலத்திலும் நடந்தiவைகளை நிதானத்துடனும் சீர்தூக்கி பார்த்து விழிப்புணர்வுடனும் முன்மதியுடனும் செயலாற்றினால் இப்படிப்பட்ட அராஜகமும் அநாகரிகமுமாக அநீதியுமான அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளிவைக்கலாம்.

எனவே ஓன்றுபட்டால் உண்டுவாழ்வு என்பதைப்போல மக்களாகிய நீங்கள் ஓரு உயரிய இலச்சியத்துக்காக ஒன்றுபட்டால் ஒரு உண்மையான மாற்றத்தை உருவாக்கலாம் ஆகவே நீதியும் சமாதனமும் சமத்துவமும் ஒளிமயமான எதிர்காலமுள்ள மாற்றத்தை உருவாக்க பொறுப்புணர்வுடனும் அமைதியுடனும் நிதானத்துடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சமகால சூழலில் தமிழ் மக்களை விழிப்புணர்வுடன் செயற்படுமாறு மன்னார் பிரஜைகள் குழு Reviewed by Author on November 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.