இலங்கைத் தமிழர்கள் உட்பட பலரை கொன்றதாக-கனடாவை அதிர வைத்த கொலைகாரன்!
இரண்டு இலங்கையர்கள் உட்பட்ட 8 பேரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மெக்ஆத்தர் என்ற கனேடிய பொதுமகன், தமது குற்றங்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவரே கனடாவில் அதிக கொலைகளை செய்தவராக கருதப்படுகிறார் என்று கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன
இந்தநிலையில் அவரின் விசாரணைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகின்றன. இதன்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2010- 2017ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையின் இரண்டு தமிழ் அகதிகள் உட்பட்ட 8 பேரைக்கொலை செய்ததாக மெக் ஆத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதற்கு ஆதாரமாக கொலை செய்யப்பட்டவர்களின் புதைக்கப்பட்ட சடலங்கள் அவரின் காணிகளில் இருந்து விசாரணையாளர்களால் மீட்கப்பட்டன.
இந்தநிலையிலேயே அவர் நேற்று கனேடிய நீதிமன்றத்தில் வைத்து தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் உட்பட பலரை கொன்றதாக-கனடாவை அதிர வைத்த கொலைகாரன்!
Reviewed by Author
on
January 30, 2019
Rating:

No comments:
Post a Comment