அண்மைய செய்திகள்

recent
-

திருவாரூர் தொகுதியில் தனித்து போட்டியிடும் சீமான் -


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தொகுதியில் சீமான் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பலம் வாய்ந்த அரசியல் தலைவராக இருந்து வந்த கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானார். இந்நிலையில் அவர் எம்.எல்.ஏ-வாக இருந்த திருவாரூர் தொகுதி காலியானது.

இதனையடுத்து அந்த தொகுதியில் தேர்தல் நடத்த திட்டமிட்ட தேர்தல் ஆணையம், வருகிற 28ஆம் தேதி தேர்தல் நடத்த இருப்பதாக அறிவித்தது. முன்னாள் முதலர்வர் கருணாநிதியின் தொகுதி என்பதால் பல்வேறு கட்சிகளும் தன் வசம் அந்த தொகுதியை இழுக்க முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் திருவாரூர் தொகுதியில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ரஷ்ய புரட்சியாளர் லெனின் கூறிய ”வெல்ல முடியாத படை என்று வரலாற்றில் ஒன்றும் இல்லை”என்ற வாக்கியத்தை குறிப்பிட்டு தன்னால் வெற்றிபெற இயலும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் தான் தேசிய மற்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

திருவாரூர் தொகுதியில் தனித்து போட்டியிடும் சீமான் - Reviewed by Author on January 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.