அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நீதிமன்ற சிறைக்கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட நபர் மயங்கி வீழ்ந்ததார்-வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிமன்ற சிறைக்கூண்டுக்குள்
அடைத்து வைக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவர் மயங்கி வீழ்ந்ததும் நீதவானின்
கட்டளைக்கு அமைய அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

902 மில்லிக் கிராம் கரோயின் என்ற போதை வஸ்துடன் கைது செய்யப்பட்டதாக தெரிவித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தலைமன்னார் பியரைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை வியாழக்கிழமை  30.05.2019 மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரனைக்காக சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்து வரப்பட்டிருந்தார்.

இவ் சந்தேக நபரை விசானைக்காக மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் ஆஐர்படுத்தியபோது இவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கும்படியும் விசாரனைக்காக பிறிதொரு திகதியை குறிப்பிட்டு  நீதவான் வழக்கை ஒத்தி வைத்தார்.

இதைத் தொடர்ந்து இவ் சந்தேக நபரை நீதமன்றத்துக்குள் இருக்கும்
சிறைக்கூட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டதும் இவ் நபர் சற்று நேரத்தில்
மயங்கி விழவே நீதவானின் உத்தரவுக்கமைய நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) நீதிமன்றுக்கு வரவழைக்கப்பட்டு இவ் நபரை உடன் மன்னார் பொது வைத்திசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

மன்னார் நீதிமன்ற சிறைக்கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட நபர் மயங்கி வீழ்ந்ததார்-வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். Reviewed by Author on May 30, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.