2020 இல் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் அதிகரிக்கப்படும் ஆளுநர் -
மூன்று சதவீதமாகவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் அடுத்த வருடம் அதாவது எதிர்வரும் 2020 ஜனவரி மாதம் முதல் 6 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
'எம் மத்தியில் வாழும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளும், வாய்ப்புக்களும்' என்ற தலைப்பில் யாழ்.பொது நூலகத்தில் இன்று நடைபெற்ற ஐந்தாவது வடக்கு வட்டமேசை கலந்துரையாடலில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் சவால்கள், தேவைகள் தொடர்பாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
தற்பொழுது 3 சதவீதமாகவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு அடுத்த வருடம் அதாவது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 6 சதவீதமாக அதிகரிக்கப்படும்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்து வசதிகளும் அவர்களது தேவைகள் தொடர்பிலான அறிவுறுத்தல்களை திணைக்கள தலைவர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
2020 இல் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் அதிகரிக்கப்படும் ஆளுநர் -
Reviewed by Author
on
September 06, 2019
Rating:

No comments:
Post a Comment