மன்னார் கட்டைக்காடு பகுதியில் அமைக்கப்பட்ட கட்டைக்காடு புனித செபஸ்டியார் முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு.
மன்னார் கட்டைக்காடு பகுதியில் அமைக்கப்பட்ட கட்டைக்காடு புனித செபஸ்டியார் முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் நேற்று சனிக்கிழமை(12) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை வழங்கிய நில ஒதுக்கீட்டில், வட மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குறித்த முதியோர் பகல் பராமரிப்பு நிலையத்தை வட மாகாண பிரதம செயளாளர் ஏ.பத்திநாதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

மன்னார் கட்டைக்காடு பகுதியில் அமைக்கப்பட்ட கட்டைக்காடு புனித செபஸ்டியார் முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு.
Reviewed by Author
on
October 13, 2019
Rating:

No comments:
Post a Comment