சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம்! தமிழகக்கட்சிகள் கண்டனம் -
இலங்கையில் தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரமே பாடப்படவேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கையை தமிழகக்கட்சிகள் கண்டித்துள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் எஸ்.ராமதாஸ் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த விடயத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக்கழக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் பெரும்பான்மைக் கொள்கை இலங்கையின் தமிழர்களை தனிமைப்படுத்தி விடும் என்றும், தமக்கு வாக்களித்த சிங்கள மக்களை திருப்திபடுத்தும் நடவடிக்கையாகும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம்! தமிழகக்கட்சிகள் கண்டனம் -
Reviewed by Author
on
December 28, 2019
Rating:

No comments:
Post a Comment