முச்சக்கரவண்டி சாரதிக்கு தூக்கம்; விபத்தில் இருவர் பலி...
கேகாலை, கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (20) அதிகாலை 5.30 மணியளவில் கல்கமுவ பாடசாலைக்கு அருகில் முச்சக்கர வண்டி ஒன்று, கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இ.போ.ச. பஸ் ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியின் சாரதிக்கு தூக்கம் சென்றதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில், முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி மற்றும் பின்னாலிருந்து பயணித்த 26 வயதான பெண்ணொருவரும், 21 வயதான ஆணொருவரும் படுகாயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னாலிருந்து பயணித்த இருவரும் மரணமடைந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியின் சாரதி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று (20) அதிகாலை 5.30 மணியளவில் கல்கமுவ பாடசாலைக்கு அருகில் முச்சக்கர வண்டி ஒன்று, கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இ.போ.ச. பஸ் ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியின் சாரதிக்கு தூக்கம் சென்றதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில், முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி மற்றும் பின்னாலிருந்து பயணித்த 26 வயதான பெண்ணொருவரும், 21 வயதான ஆணொருவரும் படுகாயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னாலிருந்து பயணித்த இருவரும் மரணமடைந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியின் சாரதி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முச்சக்கரவண்டி சாரதிக்கு தூக்கம்; விபத்தில் இருவர் பலி...
Reviewed by Author
on
January 20, 2020
Rating:

No comments:
Post a Comment