அழிந்து வருகின்ற பாரம்பரிய வழி முறைகள் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன்.-
அழிந்து வருகின்ற பாரம்பரிய வழி முறைகள் மீண்டும் எமது சந்ததியினருக்கு கொண்டு வர அனைவரும் பாடு பட வேண்டும் என மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில்,உழவர் விழாவும்,முத்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வும் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரை நிகழ்த்துகையில்,,,
போரூக்கு பின்னர் விவசாய வழி முறைகள் எல்லாம் மாறி விட்டது.
அந்த வாகையில் பாரம்பரிய விவசாய வழி முறைகளை மீண்டும் கொண்டு வர வேண்டுமாக இருந்தால் பாரம்பரிய விவசாய வழி முறைகளோடு வாழ்ந்த மூத்த விவசாயிகள் கௌரவிக்கப்பட வேண்டும்.
அவர்களின் ஊடாக மீண்டும் பாரம்பரிய விவசாய வழி முறைகளை கொண்டு வர வேண்டும்.என்பதே எமது எதிர் பார்ப்பு.
தற்போது கலை,கலாச்சாரம் எல்லாம் மழுங்கடிக்கப்பட்டு விட்டன.
எதனை எடுத்துக் கொண்டாலும் இணையத்தளமும்,கையடக்கத் தொலைபேசியிலும் பொழுது போகின்றது.ஆனால் யாருமே இந்த விழாக்களைப் பற்றி நினைப்பதில்லை.
-அக்காலத்தில் நெல் வெட்டும் போது ஒரு பாடல்,பிள்ளை பிறந்தால் ஒரு பாடல்,ஒவ்வொறு தொழில் துறைகளுக்கும் ஒரு பாடல்,இறந்தால் ஒப்பாரி.இவ்வாறு கலாச்சாரங்கள் அழகான முறையில் காணப்பட்டது.ஆனால் இப்பபோது எல்லாமே கைமாறி விட்டது.
இக்கலாச்சார வழி முறைகள் எமது சந்ததிகளுக்கும்,தமிழர்களின் கலாச்சார விழுமியங்கள் அடுத்த சந்ததிகளுக்கும் செல்ல வேண்டும் .அதற்கு அனைவரும் பாடு பட வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த நிகழ்வில் மூத்த விவசாயிகள் கௌரவிக்கப்பட்டதோடு,கலை,கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில்,உழவர் விழாவும்,முத்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வும் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரை நிகழ்த்துகையில்,,,
போரூக்கு பின்னர் விவசாய வழி முறைகள் எல்லாம் மாறி விட்டது.
அந்த வாகையில் பாரம்பரிய விவசாய வழி முறைகளை மீண்டும் கொண்டு வர வேண்டுமாக இருந்தால் பாரம்பரிய விவசாய வழி முறைகளோடு வாழ்ந்த மூத்த விவசாயிகள் கௌரவிக்கப்பட வேண்டும்.
அவர்களின் ஊடாக மீண்டும் பாரம்பரிய விவசாய வழி முறைகளை கொண்டு வர வேண்டும்.என்பதே எமது எதிர் பார்ப்பு.
தற்போது கலை,கலாச்சாரம் எல்லாம் மழுங்கடிக்கப்பட்டு விட்டன.
எதனை எடுத்துக் கொண்டாலும் இணையத்தளமும்,கையடக்கத் தொலைபேசியிலும் பொழுது போகின்றது.ஆனால் யாருமே இந்த விழாக்களைப் பற்றி நினைப்பதில்லை.
-அக்காலத்தில் நெல் வெட்டும் போது ஒரு பாடல்,பிள்ளை பிறந்தால் ஒரு பாடல்,ஒவ்வொறு தொழில் துறைகளுக்கும் ஒரு பாடல்,இறந்தால் ஒப்பாரி.இவ்வாறு கலாச்சாரங்கள் அழகான முறையில் காணப்பட்டது.ஆனால் இப்பபோது எல்லாமே கைமாறி விட்டது.
இக்கலாச்சார வழி முறைகள் எமது சந்ததிகளுக்கும்,தமிழர்களின் கலாச்சார விழுமியங்கள் அடுத்த சந்ததிகளுக்கும் செல்ல வேண்டும் .அதற்கு அனைவரும் பாடு பட வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த நிகழ்வில் மூத்த விவசாயிகள் கௌரவிக்கப்பட்டதோடு,கலை,கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அழிந்து வருகின்ற பாரம்பரிய வழி முறைகள் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன்.-
Reviewed by Author
on
January 20, 2020
Rating:

No comments:
Post a Comment