அண்மைய செய்திகள்

recent
-

ஜெனீவாவிலிருந்து இலங்கைக்கு முதல் நெருக்கடி -


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை சர்வதேச விசாரணைகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜெனிவா பணிப்பாளர் ஜோன் பிஷ்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும்,
தங்கள் அரசாங்கம் ஐ.நாவின் கடமைகளில் இருந்து பின்வாங்கிக் கொள்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் இடம்பெற்று வரும் 43ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாரையும் ஏமாற்ற முடியாது. போர்க்குற்றங்களில் சிக்கியுள்ளதாக கூறப்படும் ராஜபக்ஷர்கள் பொறுப்புக்கூறலை முன்னேற்றுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை சர்வதேச விசாரணைகள் மற்றும் வழக்குகளை உருவாக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வலியுறுத்தலானது இலங்கைக்கு ஜெனீவாவிலிருந்தான முதல் நெருக்கடியாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜெனீவாவிலிருந்து இலங்கைக்கு முதல் நெருக்கடி - Reviewed by Author on February 28, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.