இந்த அரசாங்கத்திலும் ஊடகவியலாளர் மீதான அடக்கு முறை தொடர்கிறது! சிவசக்தி ஆனந்தன் சீற்றம் -
இந்த அரசாங்கத்திலும் ஊடகவியலாளர் மீதான அடக்குமுறை தொடர்கின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஊடகவியலார்கள் மீதான கடத்தல்களும், கைதுகளும் தற்போதும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளரும் அவருடைய மனைவியும் தற்போது அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த யுத்த காலத்திலும் கூட 35இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
கடந்த நான்கரை வருடகாலமாக நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்திலும் கூட கடந்த அரசாங்கத்தினால் கொலைசெய்யப்பட்ட 35 ஊடகவியலாளர்களின் விசாரணைகள் நடைபெறவில்லை.
ஆகவே இந்த நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் கூட அவர்களிற்கான நீதியை பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
தொடர்ந்தும் அதேநிலைமைதான நீடித்துக்கொண்டு இருக்கிறது. ஆகவே அரசாங்கம் ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும் அவர்களை சுதந்திரமாக எழுதுவதற்கும் பணியாற்றுவதற்கும் சந்தர்ப்பம் வழங்குவதாக தெரிவித்த போதிலும், ஊடகவியாலாளர்கள் மீதான கைதுகளும் விசாரணைகளும் தொடர்ந்து கொண்டு இருப்பதை அனுமதிக்க முடியாது.
ஆகவே ஊடகவியாலாளர்கள் சுதந்திரமாக பணியாற்றுவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கத்திலும் ஊடகவியலாளர் மீதான அடக்கு முறை தொடர்கிறது! சிவசக்தி ஆனந்தன் சீற்றம் -
Reviewed by Author
on
March 02, 2020
Rating:

No comments:
Post a Comment