அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நானாட்டான் பிரதேச செயலக விளையாட்டு நிகழ்வு ஏற்பாடு சரியில்லை-மக்கள் விசனம்

வருடாவருடம் நடைபெற்றுவருகின்ற மன்னார் நானாட்டான் பிரதேச செயலக விளையாட்டு நிகழ்வானது இம்முறையும் 2020ம் ஆண்டுக்கான நானாட்டான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையேயான குழு விளையாட்டு நிகழ்வுகள் பிரதேச சபை மைதானத்தில்  நடைபெற்று வருகின்றது.

நானாட்டான் பிரதேச கழகங்கள் பங்குபற்றும் நிகழ்வானது  பலவகையான விளையாட்டுக்களை உள்ளடக்கி  சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் நடைபெற்று வருகின்றது. இவ்வாறு நடைபெறும் நிகழ்வுகளை ஒழுங்கான முறையில் அல்லவா நடாத்தபட வேண்டும்.

மைதானத்தில் மோசமான  முறையில் அமைக்கப்பட்டுள்ள நடுவர் காரியாலயத்தையும்,வீரர்கள் ஓய்வு எடுக்கும்
பந்தல்களையும் காணும்போது இன்னும் நாகரீகம் வளராத....தெரியாத... வர்கள்போல தோன்றுகின்றது.
  • விளையாட்டு வீரர்களின் நிலை
  • பங்குபற்றும்  நடுவர்களின் நிலை
 மன்னார் மாவட்டத்தின் 05 பிரதேச செயலகங்களில் ஒன்றான நானாட்டான் பிரதேச செயலகம் (35 கிராம சேவைப்பிரிவினை கொண்ட) ஒரு நிகழ்வினை நடாத்தும் போது இவ்வாறான மோசமான நிலையிலா நிகழ்வினை நடாத்துவது.

  •  இவ்நிகழ்வுகளுக்கு என்று ஒதுக்கப்படும் நிதி எங்கே....?
  • பொறுப்பான அதிகாரிகள் எங்கே.......?
  • விளையாட்டு ஏற்பாட்டுக்குழு எங்கே......?
 ஒழுங்கானமுறையில் செய்ய முடியவில்லை என்றால் நிகழ்வுகளை செய்ய வேண்டாம். சும்மா கண்துடைப்புக்காக இவ்வாறு தரமற்ற முறையில் நிகழ்வுகளை  நடாத்தவேண்டாம்.





சம்மந்தப்பட்ட அதிகாரிகள்  உடனடியாக இவ்வாறு நடைபெறுகின்ற நிகழ்வுகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண  வேண்டும் என அப்பிரதேச சபை உறுப்பினரும் மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




மன்னார் நானாட்டான் பிரதேச செயலக விளையாட்டு நிகழ்வு ஏற்பாடு சரியில்லை-மக்கள் விசனம் Reviewed by Author on March 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.