அண்மைய செய்திகள்

recent
-

கண்டி பூவெலிகடவில் தாழிறங்கிய ஐந்து மாடிக் கட்டடம் பள்ளத்தாக்கு ஆரம்பமாகும் இடத்தில் நிர்மாணிப்பு – வௌியான தகவல்

பள்ளத்தாக்கு ஆரம்பமாகும் இடத்தில் தளர்வான மண் உள்ள பகுதியில் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் கண்டி மாவட்டத்திற்குப் பொறுப்பான புவிசரிதவியல் நிபுணர் சமந்த போகஹபிடிய தெரிவித்துள்ளார்.

 பாரதத்தைத் தாங்க முடியாமையால் கட்டடம் தாழிறங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட பேராசியர் அதுல சேனாரத்ன, கட்டடம் தாழிறங்கிய இடத்திற்குச் சென்று கண்காணித்தார். 

 இந்த இடத்தைச் சூழ வாழ்ந்த நான்கு குடும்பங்கள், தற்காலிகமாக வௌியேற்றப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் நிபுணர் சமந்த போகஹபிடிய கூறினார். இந்த ஐந்து மாடிக் கட்டடம் தாழிறங்கியமைக்கு நில அதிர்வு காரணமல்ல என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்தார்.

கண்டி பூவெலிகடவில் தாழிறங்கிய ஐந்து மாடிக் கட்டடம் பள்ளத்தாக்கு ஆரம்பமாகும் இடத்தில் நிர்மாணிப்பு – வௌியான தகவல் Reviewed by Author on September 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.