அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் காலமானார்!

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் ( Ruth Bader Ginsburg) காலமானதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புற்றுநோயால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த கின்ஸ்பர்க், நேற்று (வெள்ளிக்கிழமை) தனது 87ஆவது வயதில், வொஷிங்டன் டி.சி.யில் உள்ள அவரது வீட்டில் காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். 

 பெண்கள் உரிமைகளில் ஒரு சிறந்த சாதனையாளராக பார்க்கப்படும் கின்ஸ்பர்க், ஆண்டின் தொடக்கத்தில், புற்றுநோய்க்கான கீமோதெரபிக்கு உட்படுத்தப்படுவதாகக் கூறினார். ஒரு முக்கிய பெண்ணியவாதியான கின்ஸ்பர்க், அமெரிக்காவில் தாராளவாதிகளுக்கு ஒரு தலைவராக ஆனார். கின்ஸ்பர்க் மிக வயதான நீதி மற்றும் உச்சநீதிமன்றத்தில் அமர்ந்த இரண்டாவது பெண்மணி ஆவார். அங்கு அவர் 27 ஆண்டுகள் பணியாற்றினார்.

 அவரது இழப்பு குறித்து தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் தேசம் வரலாற்று சிகரத்தை இழந்துவிட்டது. உச்சநீதிமன்றத்தில் நாங்கள் ஒரு நேசத்துக்குரிய சக ஊழியரை இழந்துவிட்டோம். இன்று நாங்கள் துக்கப்படுகிறோம். ஆனால் வருங்கால சந்ததியினர் ரூத் பேடர் கின்ஸ்பர்க்கை நாங்கள் அறிந்ததைப் போலவே நினைவில் கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது’ என கூறினார். நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் இழப்பிற்கு பலரும் மெழுவர்த்தி ஏற்றி தங்களது அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் காலமானார்! Reviewed by Author on September 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.