அண்மைய செய்திகள்

recent
-

களஞ்சியப்படுத்திய மீன்களை விற்க ஏற்பாடு செய்க – மீனவர்கள் அரசிடம் கோரிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவலால் மீன்பிடிச் சமூகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத் திலங்கை மீன்வள சம்மேளனத்தின் செய்தித் தொடர்பாளர் ரத்னா கமகே தெரிவித்துள்ளார். தற்போது, படகுகள் மற்றும் குளிர் களஞ்சியங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மீன்களை விற்க ஏற்பாடு செய்யுமாறு மீனவர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பேருவளை மீன்வளத் துறைமுகத்தில் 32 நாள் கப்பல் களும், காலி துறைமுகத்தில் 21 நாள் கப்பல்களும் தற் போது மூடப்பட்டுள்ளன. 

 இவ்வாறு 3 இலட்சத்து 50 ஆயிரம் மீன்கள் மூடப்பட்டுள்ளமையால் தற்போதுள்ள மீன் இருப்புகளை நுகர்வோரிடம் ஒப்படைக்கச் சுகாதார வழிகாட்டுதலின் அடிப்படையில் விரைவான திட்டத்தை மேற் கொள்ள சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்து ரையாடலில் தீர்மானித்துள்ளனர்.

 கொவிட் -19 அச்சுறுத்தல் காரணமாக காலி, பேருவளை மற்றும் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் பேலியகொட மொத்த மீன் சந்தை மூடப்பட்டிருப்பதால் இலங்கை மீன்வளத் துறையில் பாதிப்பு ஏற்படாதிருக்க சுகாதார நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாடு முழுவதிலும் உள்ள 20 மீன்பிடித் துறைமுகங்களில் சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்தக் கவனம் செலுத்தப்பட்டது.மீன்வளத் துறைமுகங்களுக்குப் பொருத்தமான சுகாதார வழிகாட்டுதல்களை மீன்வளத்துறை அமைச்சு மூலம் வெளியிடுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்கவுக்கு அமைச்சர் பவித்ரா அறிவித்துள்ளார்.

களஞ்சியப்படுத்திய மீன்களை விற்க ஏற்பாடு செய்க – மீனவர்கள் அரசிடம் கோரிக்கை Reviewed by Author on October 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.